ஜனாதிபதி கோத்தபய தலதா மாளிகைக்கு விஜயம்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்று (26) பிற்பகல், கண்டியில் உள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க தலதா மாளிகைக்கு விஜயம் செய்து, மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டார்.

தலதா மாளிகைக்கு விஜயம் செய்த ஜனாதிபதியை தியவடன நிலமே நிலங்க தேல வரவேற்றார்.

பின்னர், மல்வத்தை மஹா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி மல்வத்தை பீடத்தின் மஹாநாயக்க தேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து, நலன் விசாரித்தார். மஹாநாயக்க தேரர் பிரித் பாராயணம் செய்து, ஜனாதிபதியை ஆசிர்வதித்தார்.

மல்வத்தைப் பீடத்தின் அநுநாயக்க தேரர் சங்கைக்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் அவர்களையும் சந்தித்த ஜனாதிபதி தேரரின் நலன் விசாரித்தார். அனுநாயக்க தேரர் அவர்களுக்காக இலங்கைக் கடற்படையின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டுவரும் சங்கவாசக் கட்டிடத்தையும், ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.

மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய நியங்கொட விஜித்த தேரரையும் சந்தித்த ஜனாதிபதி, தேரர் அவர்களிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

நாட்டின் தற்போதைய அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து, மகாநாயக்க தேரர்கள் மற்றும் அனுநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி இதன்போது விளக்கினார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...