தனது நிலைப்பாட்டை மாற்ற முடியாது என்கிறார் சாகர காரியவசம்!

Date:

இந்நாட்டு எரிபொருள் விலை அதிகரிப்பு தீர்மானம் தொடர்பில் தனது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (16) கட்சி அலுவலகத்திற்கு வந்த போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார்.

 

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் தனது கையெழுத்துடன் வௌியிடப்பட்ட கடிதத்தின் நிலைப்பாட்டில் தான் மற்றும் கட்சி தொடர்ந்தும் உள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

 

“இரகசிய கலந்துரையாடல்கள் இல்லை. நாம் அனைத்தையும் வௌிப்படையாக செய்கிறோம். இந்நாட்டு மக்களால் உருவாக்கப்பட்ட கட்சிதான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன. நாம் மக்களுக்காக எடுக்க வேண்டிய அனைத்து தீர்மானங்களையும் எடுப்போம். தைரியமாக அறிவிப்போம். எதிர்காலத்திலும் அப்படிதான். வௌியிடப்பட்ட கடிதத்தின் நிலைப்பாட்டில் இன்றும் நான் இருக்கிறேன். கட்சியும் அப்படிதான்.”

Popular

More like this
Related

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...