தனியார் மருந்தகங்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Date:

தனியார் மருந்தகங்களின் ஊழியர்களுக்காக கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் மருந்தகங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மருந்தகங்களில் பணி புரிபவர்கள் அடிக்கடி கொவிட் நோயாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை சந்திக்க நேரிடுவதால் அவர்களுக்கு கட்டாயமாக தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அந்த சங்கத்தின் ஊடகச் செயலாளர் சிதத் சுரங்க தெரிவித்தார்.

பயணத் தடை காலப்பகுதியிலும் மருந்தகங்களை திறந்து வைத்து பொது மக்களுக்கு சேவையாற்றி வரும் மருந்தக ஊழியர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடிய போதும் இதுவரை சாதகமான பதில் ஏதும் வரவில்லை என அவர் தெரிவித்தார். கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மருந்தக உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...