நாடு திரும்பிய தனுஷ்க குணதிலக்க, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்டிஸ் நீர்கொழும்பு ஹோட்டலில் தனிமைப்படுத்தலுக்கு

Date:

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணத்திற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று முன்தினம் (27) இரவு டராம் நகரில் சுற்றித்திரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான தனுஷ்க குணதிலக்க, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் குறித்த மூன்று வீரர்களுக்கும் எதிராக தற்காலிக போட்டித்தடை விதித்து அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்தது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரையில் இந்த தற்காலிக தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் இன்று பிற்பகல் 1.15 மணிக்கு ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 504 என்ற விமானத்தில் அவர்கள் மூவரும் லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இவர்கள் நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...