நீதித்துறையுடன் தொடர்புடைய பல புதிய பதவிகளுக்கு பாராளுமன்ற சபை இணக்கம்

Date:

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக பதவி வகித்த நீதிபதி அர்ஜுன ஒபேசேகரவை, உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்க நாடாளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

நீதியரசர் சிசிரி டி ஆப்ரூவின் ஓய்வின் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நீதிபதி ஒபேசேகரவை நியமிக்குமாறு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கும் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற் நாடாளுமன்ற பேரவை கூட்டத்தின்போது, இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், நீதியரசர் கே.பி. பெர்னாண்டோவை மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவராகவும், நீதிபதி சசி மகேந்திரனை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும், நீதியரசர் எல்.டி.பீ. தெஹிதெனியவை நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் நியமிக்க நாடாளுமன்ற பேரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...