பயணத்தடையால் நாடாளுமன்றத்துக்கு பூட்டு!

Date:

நாடாளுமன்ற கட்டட தொகுதியின் அனைத்து அலுவலகங்களும் எதிர்வரும் 7ம் திகதிவரை மூடப்பட்டுள்ளன.

 

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை 7ம் திகதிவரை நீடிப்பதால் அனைத்து அலுவலக ஊழியர்களும் கடமைக்கு சமுகமளிக்கத் தேவையில்லை என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மாத்திரம் பாதுகாப்பு கடமையில் இருப்பர்.

நாடாளுமன்றம் 8ம் திகதி கூடவுள்ள போதும் 7ம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான விசேட குழு கூட்டத்தில் மேலதிக முடிவுகள் எடுக்கப்படும் என நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் குசானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...