பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு நாளை முதல்!

Date:

கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்துக்குள்ளானதால் பாதிக்கப்பட்டுள்ள மீனவருக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை நாளை முதல் இடம் பெறும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதுள்ள பாணதுறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதியில் முறையான ஆய்விற்கு பின்னர் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் (11) பிரதமர் ஆலோசனை வழங்கினார். இதன்போதே இந்த கொடுப்பனவு தொடர்பாக பிரதமர் அறிவித்தார்.

 

கப்பல் விபத்துக்குள்ளானதால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது. இழப்பீட்டை பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறு பிரதமர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...