பிறந்தநாளை முன்னிட்டு முகநூலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது முகநூலில் பதிவிட்ட செய்தி

Date:

நான் மரணிக்கின்ற தினத்தன்று என்னால் எதிர்கால சந்ததிக்கு சிறந்த உதாரணமாக விளங்கமுடியுமென்றால் என் மகிழ்ச்சி அவ்வளவு அளவிடமுடியாததாகயிருக்கும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு முகநூலில் தனது கருத்தினை பதிவிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
எனக்கு தற்போது எழுபத்தாறுவயது.எழுபத்தாறு வருடங்களின் முன்னர் நான் இந்த உலகிற்கு தனியாகவே வந்தேன்.நான் மாத்திரமல்ல அனைவரும் தனியாகவே வந்தோம்.
ஒருநாள் நான் வெறுங்கையுடன் தனியே போகநேரிடும்.
ஆனால் இந்தஉலகிலிருந்து விடைபெறும் நாள் அன்று நாங்கள் இன்னொரு பொருளை எடுத்துச்செல்கின்றோம்,அது எங்கள் வாழ்க்கையில் நாங்கள் செய்த விடயங்களிற்கு ஏற்ப எமக்கு கிடைக்கின்ற நற்பெயர் அல்லது மோசமான பெயர்.
இந்த யதார்த்தத்தை நான் சிறுவயது முதல் உணர்ந்துள்ளேன். உலகில் எங்கள் வாழ்க்கை காலத்தில் நாங்கள் நாங்கள் எங்கள் வாழ்க்கையை ஒளிமயமாக்கி உலகை சிறந்த இடமாக மாற்றவேண்டும்.
எனது வாழ்நாள் முழுவதும் என்னால் முடிந்தளவிற்கு அந்த கடமையை நிறைவேற்ற முயன்றுள்ளேன்.
எனது வாழ்நாளில் நான் எனது தேசத்திற்கும் மக்களிற்கும்உலகிற்கும் எதனையாவது செய்திருப்பேன் என்றால் உலகை சிறந்ததாக மாற்றுவதற்காகவே நான் அதனை செய்தேன்.
நான் மரணிக்கின்ற தினத்தன்று என்னால் எதிர்கால சந்ததிக்கு சிறந்த உதாரணமாக விளங்கமுடியுமென்றால் என் மகிழ்ச்சி அவ்வளவு அளவிடமுடியாததாகயிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...