பொசன் போயா தினத்தை முன்னிட்டு பக்தர்களின் நலன்கருதி விசேட நடைமுறை!

Date:

எப்.முபாரக்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் வழிகாட்டலுக்கமைய பொசன் போயா தினத்தை முன்னிட்டு பக்தர்களின் நலன்கருதி மாவட்ட செயலக பக்திப்பாடல் குழுவினர் பிரத்தியேக வாகனம் மூலம் பக்தி கீதங்களை நகர்சார் பிரதேங்களில் பவனிவந்து பாடும் வகையிலான ஒழுங்குகள் இன்று(24) மாலை மாவட்ட செயலக வளாகத்திலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

தற்போது நிலவும் கொவிட் அசாதாரண சூழ்நிலையாலும் பயணக்கட்டுப்பாடுகளாலும் பக்தர்கள் பொசன் போயா தின அனுஷ்டாங்களை மேற்கொள்ளமுடியாததை முன்னிட்டே இப்பிரத்தியேக ஏற்பாடு பகதர்களின் நலன்கருதி அரசாங்க அதிபரால் தலைமையிலான மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டது.

 

இப்பக்திபாடல் குழுவினர் முக்கியமான வீதிகளில் பாடல்களை பாடுவதுடன் நாட்டுக்கு ஆசிவேண்டியும் வலம்வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இதன் ஆரம்ப நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்,மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் சனத் குருகுலசூரிய உட்பட உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...