சிறையிலடைக்கப்பட்டுள்ள ஏழு முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுவிக்க உள்ளதாக டெய்லி மிர்ரொர் ஊடகம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் நாடாளுமன்றில் இது குறித்து பேசிய நாமல் ராஜபக்ச, அரசிடம் ‘வேண்டுகோள்’ விடுத்திருந்த நிலையில் இவ்வாறு விடுதலை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இத்தகவலை வெளியிட்டுள்ளார்.