முன்னாள் போராளிகள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பொருளாளர் கைது!

Date:

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட முன்னாள் போராளிகள் ஜனநாய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பொருளாளரான முன்னாள் போராளி ஒருவரை இன்று (01) பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

 

மாவட்ட புலனாய்வு பிரிவினரின் இரகசிய தகவலை அடுத்து களுவாங்சிக்குடி பொலிசார் சம்பவ தினமான இன்று முன்னாள் போராளியான முன்னாள் போராளிகள் ஜனநாயகட்சியின் பொருளாளராக செயற்பட்டு வந்த நாகலிங்கம் பிரதீபன் என்பவரை மட்பாண்ட வீதி போரதீவு பிரதேசத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

 

குறித்த நபரை தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிசார் இதில் கைது செய்யப்பட்டவரை நாளை (02) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...