அமெரிக்காவில் 12 மாடிக் கட்டடம் இடிந்து தரைமட்டம் | உயிரிழந்த நிலையில் 35 பேர் மீட்பு

Date:

அமெரிக்காவின் தென் புளோரிடாவில் உள்ள சிறிய கடற்கரை நகரான மியாமியில் 12 மாடிக் கட்டடம் இடிந்து தரைமட்டமானது.

இதில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. ஒருவர் உயிரிழந்த நிலையில் 35 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சாம்பிளேன் டவர்ஸ் என்ற அந்தக் கட்டடம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் மலைபோல் இடிபாடுகளும் மண்ணும் கிடக்கின்றன. இதில் காணாமல் போன 99 பேர் பட்டியலைத் தயாரித்துள்ள அதிகாரிகள் மீட்பு மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு முழுவதும் இந்த மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனிடையே இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் ஒருவனை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டனர்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...