அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு இதுவரை 30 பேர் கைச்சாத்து

Date:

ஐக்கிய மக்கள் சக்தியினால் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராகபாராளுமன்றத்தில் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22) சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக, எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிபொருள் விலையை அதிகரிக்க எடுத்த தீர்மானத்திற்கு அமைய, மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதி மீறப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் குறித்த பதவியில் அவர் இருப்பதற்கு உரித்துடையவர் அல்ல என, 10 காரணங்களை முன்வைத்து, ஐக்கிய மக்கள் சக்தியினால், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரான உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டுவருவதற்கான கையொப்பம் பெறும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

மேலும், சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ள குறித்த ஆவணத்தில் இதுவரை 30 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளதாக லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...