ஆடவர் உலகக் கிண்ண 2027 மற்றும் 2031 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 14 ஆக அதிகரிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
2024 தொடக்கம் 2030 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடர்களில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 20 ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பேரவை தெரிவித்துள்ளது.
தற்போது உலகக் கிண்ண தொடர்களில் 10அணிகள் பங்கேற்பதுடன் , இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடர்களில் 16 அணிகள் பங்கேற்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.