குருநாகல் – கண்டி அதிவேக நெடுஞ்சாலையில் சட்டவிரோத ஓட்டப்பந்தயம் | இருவர் பலி

Date:

குருநாகல் – கண்டி அதிவேக நெடுஞ்சாலைக்கு சட்டவிரோதமாக உள்நுழைந்து ஓட்டப்பந்தயம் நடத்திய போது மோட்டார் சைக்கிள் மற்றும் கார் என்பன மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு ஏழு மணியளவில் குறித்த இரண்டு வாகனங்களும் இந்த பாதையின் ஊடாக குருநாகல் நோக்கிப் பயணித்த நிலையில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும், விபத்து இடம்பெறும் போது குறித்த காரில் 5 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், ஏனைய மூன்று பேரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த நெடுஞ்சாலை இன்னும் போக்குவரத்துக்குத் திறக்கப்படாத நிலையில், சட்டவிரோதமான முறையில் அவர்கள் இந்தப் பாதை ஊடாக பயணித்துள்ளனர்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...