சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது, பொருளாதார ரீதியில் இலங்கையை வழமைக்கு கொண்டுவருவதற்கு ஒரேயொரு வழிமுறையாகும், என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டார்.
கோவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் முழுமையாக தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கோவிட் 19 தடுப்புக்கான செயற்பாடுகள் அனைத்தும் அமைச்சரவையின் கீழ் கொண்டு வரப் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுவது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். நாடு தற்போது இராணுவ மயமாக்கலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது, அது தவறான விடயம் எனவும் குறிப்பிட்டார்.