நீதித்துறையுடன் தொடர்புடைய பல புதிய பதவிகளுக்கு பாராளுமன்ற சபை இணக்கம்

Date:

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக பதவி வகித்த நீதிபதி அர்ஜுன ஒபேசேகரவை, உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்க நாடாளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

நீதியரசர் சிசிரி டி ஆப்ரூவின் ஓய்வின் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நீதிபதி ஒபேசேகரவை நியமிக்குமாறு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கும் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற் நாடாளுமன்ற பேரவை கூட்டத்தின்போது, இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், நீதியரசர் கே.பி. பெர்னாண்டோவை மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவராகவும், நீதிபதி சசி மகேந்திரனை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும், நீதியரசர் எல்.டி.பீ. தெஹிதெனியவை நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் நியமிக்க நாடாளுமன்ற பேரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

எரிபொருள் QR கட்டமைப்பின் செயல்திறன் மேம்பாடு

எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீடு செயன்முறையை மேம்படுத்தி அதன் செயல்திறனை மேம்படுத்துவது...

ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைப் படம்பிடிப்பது தொடர்பில் சவூதிக்கான இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு...

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப்...

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும்

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும்...