நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Date:

கடும் மழையுடனான வானிலை இன்றுடன் குறைவடைகின்ற போதிலும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளதால் நாட்டில் உள்ள பெரும்பாலான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சற்று குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளில் 4 வான் கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

எனவே, தெதுருஓயாவிற்கு அருகில் வாழும் மக்கள் அது குறித்து அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது நிலவும் வெள்ளப்பெருக்கு நிலை படிப்படியாகக் குறைவடையக்கூடும் எனவும் நீர்ப்பாசன திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...