பயணத்தடையால் நாடாளுமன்றத்துக்கு பூட்டு!

Date:

நாடாளுமன்ற கட்டட தொகுதியின் அனைத்து அலுவலகங்களும் எதிர்வரும் 7ம் திகதிவரை மூடப்பட்டுள்ளன.

 

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை 7ம் திகதிவரை நீடிப்பதால் அனைத்து அலுவலக ஊழியர்களும் கடமைக்கு சமுகமளிக்கத் தேவையில்லை என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மாத்திரம் பாதுகாப்பு கடமையில் இருப்பர்.

நாடாளுமன்றம் 8ம் திகதி கூடவுள்ள போதும் 7ம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான விசேட குழு கூட்டத்தில் மேலதிக முடிவுகள் எடுக்கப்படும் என நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் குசானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...