பயணத்தடையால் நாடாளுமன்றத்துக்கு பூட்டு!

Date:

நாடாளுமன்ற கட்டட தொகுதியின் அனைத்து அலுவலகங்களும் எதிர்வரும் 7ம் திகதிவரை மூடப்பட்டுள்ளன.

 

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை 7ம் திகதிவரை நீடிப்பதால் அனைத்து அலுவலக ஊழியர்களும் கடமைக்கு சமுகமளிக்கத் தேவையில்லை என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மாத்திரம் பாதுகாப்பு கடமையில் இருப்பர்.

நாடாளுமன்றம் 8ம் திகதி கூடவுள்ள போதும் 7ம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான விசேட குழு கூட்டத்தில் மேலதிக முடிவுகள் எடுக்கப்படும் என நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் குசானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...