பலவந்தமாக பௌத்த கொடி, வெசாக் கூடுகளால் அலங்கரிக்கப்பட்ட ஜெய்லானி பள்ளிவாசல்

Date:

சுமார் 1200 வரு­டங்கள் பழைமை வாய்ந்த பலாங்­கொடை – தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல், பள்­ளி­வாசல் நுழை­வாயில், வளாகம், ஸியாரம் என்­பன கடந்த வெசக் பண்­டி­கையின் போது பௌத்த கொடி­க­ளாலும் வெசக் கூடு­க­ளாலும் பல­வந்­த­மாக அலங்­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அலங்­கா­ரங்­களும், வெசக் கூடு­களும் தொடர்ந்தும் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

பள்­ளி­வாசலில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த பச்சை நிற கொடிகள் கழற்றி அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. பள்­ளி­வா­சலில் பணி­யா­ளர்கள் இல்­லாத சந்­தர்ப்­பத்­தி­லேயே இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. நெல்­லி­கல வட்­ட­கும்­புற தம்மா ரதன தேரரின் வழி­காட்­டல்­களின் படியே பள்­ளி­வா­சலில் வெசக் அலங்­கா­ரங்கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் தற்­போ­தைய பள்­ளி­வாசல் நிர்­வாகம் ஏதும் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை எனவும், பள்­ளி­வாசல் தலைவர் உட்­பட நிர்­வா­கிகள் பலர் கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­டுள்­ளதால் பள்­ளி­வாசல் நிர்­வாகம் ஸ்தம்­பித நிலையை அடைந்­துள்­ள­தா­கவும் அப்­ப­குதி மக்கள் ஊடகத்துக்கு தெரி­வித்­தனர்.

இது தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் தற்­போ­தைய தலைவர் எம்.எஸ்.எம்.நபீ­ஸிடம் ‘விடி­வெள்ளி’ வின­விய போது, ‘தனக்கு எதுவும் தெரி­யாது’ எனத் தெரி­வித்தார்.

பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபை முன்னாள் தலைவி ரொசானா அபு­சா­லியை விடி­வெள்ளி தொடர்பு கொண்டு வின­விய போது பள்­ளி­வாசல் அலங்­கா­ரங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பதை உறுதி செய்­த­துடன் இது தொடர்பில் தற்­போ­தைய நிர்­வா­கமே இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்றார்.

தற்போதைய நிர்வாக சபை வக்பு சபையினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அதன் பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவு பெறுகிறது.

(ஏ.ஆர்.ஏ.பரீல்)<

Popular

More like this
Related

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...