பிரான்ஸ் அதிபரை தாக்கியவர் வாக்கு மூலம்!

Date:

பிரான்ஸ் நாட்டின்அதிபர் கொரோனா பிரச்சினைக்கு தீர்வுகண்ட பின்னர் மக்களுடனான பிரச்சினைகளை கண்டறியும் பயணத்தை மேற்கொண்டிருந்தார் இதன் போது நாட்டின் தென் கிழக்கு பகுதிக்கு வருகை தந்த அந்நாட்டின் அதிபர் எமானுவேல் மக்ரோங் கன்னத்தில் அறையப்பட்டார்.

அதில் வேலன்ஸ் நகருக்கு வெளியே உள்ள பகுதியில் இருக்கும் ஓரிடத்திற்கு நடந்து சென்ற போது அந்நாட்டின் பிரஜை ஒருவர், அதிபர் மக்ரோங்கின் கன்னத்தில் அறைகிறார். உடனே பாதுகாப்பு அதிகாரிகள் நடுவில் புகுந்து அதிபரை பின்னே இழுத்து தூர அழைத்துச் சென்றனர்.

இது தொடர்பாக இரு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்த நபர் அதிபர் மக்ரோங் கன்னத்தில் அறையும் போது, “மக்ரோங் ஒழிக” என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

இவர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் அதிபரை அறைந்த காரணத்தை விளக்கியுள்ளனர்.

அதிபர் பின் பற்றும் நட்டின் பொருளாதார கொள்கையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இதனால் மக்கள் கஷ்டங்களை எதிர் நோக்குவதாகவும், இதனால் தான் அதிபரின் கன்னத்தில் அறைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...