மது அருந்தும் சிறுவனின் காணொளி தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகள் ஆரம்பம்

Date:

மது அருந்தும் சிறுவனின் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில் அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பேலியகொட, நுகே வீதியை சேர்ந்த 04 வயது சிறுவன், குறித்த வீடியோவில் உள்ளதாக பின்னர் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் , குறித்த வீடியோவை எடுத்த சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சட்டத்துக்கு அமைய சிறுவர்களுக்கு மதுபானம், புகைத்தல் பொருட்கள் உள்ளிட்டவைற்றை பெற்றுக்கொடுப்பது, வழங்குவது பாரிய குற்றம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கைதுசெய்யப்பட்ட 25 வயதுடைய சந்தேக நபர் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.

Popular

More like this
Related

குர்ஆனின் மொழியில் அறிவியல் பேசிய குரல் மறைந்தது!

முஹம்மத் பகீஹுத்தீன் பேரறிஞர் டாக்டர் ஸக்லூல் ராகிப் முஹம்மத் அல் நஜ்ஜார் (1933...

க.பொ.த உயர்தரப் பரீட்சையையொட்டி விசேட போக்குவரத்து சேவைகள்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையையொட்டி  விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பரீட்சைக்காலங்களில் மாணவர்கள் மற்றும்...

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 1818 தொலைபேசி இலக்கத்துக்கு 800 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகத் தகவல் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 தொலைபேசி இலக்கத்துக்கு...