ரிஷாத் பதியுதீன் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுவது என்ன?

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் அரசியல் நோக்கங்கள் கிடையாது. நீதிமன்றமே இது தொடர்பில் சுயாதீனமாக தீர்மானித்து நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (22) நடைபெற்ற போது ‘ உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்

நிறைவடைந்துள்ள போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் ஏன் நீதிமன்றத்தில்

முன்னிலைப்படுத்தப்படாமல் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் ? ‘ என்று கேள்வியெழுப்பிய போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து சுமார் 3 நாட்கள் கடந்துள்ளன. இது சட்டரீதியான நிலைமையாகும். மாறாக பலவந்தமாக யாரையும் தடுத்து வைத்திருப்பதில்லை. நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட காரணிகளுக்கமையவே அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இது தொடர்பில் எம்மால் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. இலங்கையில் சுயாதீன பொலிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சுயாதீனமான நீதித்துறை காணப்படுகிறது. நீதிமன்ற செயற்பாடுகள் தொடர்பான தீர்மானங்கள் நீதிமன்றத்தினாலேயே எடுக்கப்படும் என்றார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...