விபத்துக்களால் ஒரே நாளில் 11 பேர் பலி!

Date:

கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

அவற்றுள் 8 மரணங்கள் நேற்றைய தினத்தில் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளொன்றில் 11 மரணங்கள் பதிவாகின்றமை சாதாரணமான ஒரு நிலமை அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களுள் பாதசாரிகள் இருவர், மோட்டார் சைக்கிளில் பயணித்த 6 பேர், சைக்கிளில் பயணித்த 2 பேர் மற்றும் லொறியில் பயணித்த ஒருவரும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாதசாரிகளே அதிகளவில் விபத்துக்களால் உயிரிழப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...