வெளிநாடுகளிலிருந்து வருகைத்தரும் கொவிட் தடுப்பூசி பெற்றவர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியமன்று!

Date:

கடந்த 14 நாட்களுள் இந்தியா,வியட்நாம்,தென் ஆபிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு சென்றிருந்த எந்தவொரு பயணிகளுக்கும் இலங்கை வருவதற்கு அனுமதி இல்லையென அண்மையில் சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவிப்பொன்றை விடுத்திருந்தது.

எனினும் மேற்படி நாடுகளுக்கு சென்றிருந்த அதேவேளை கொவிட் தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளவர்கள் தடுப்பூசிகளின் இரண்டு மாத்திரைகள்) இலங்கை வர அனுமதிக்கப்படுவர் என்றும் இவர்கள் கட்டாய சுயத்தனிமைப்படுத்தலை கடைப்பிடிப்பது அவசியமில்லை எனவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய கடந்த 14 நாட்களுக்குள் மேற்படி நாடுகளுக்கு சென்றிருந்த இலங்கையர்கள் அல்லது இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்கள் மற்றும் இடைமாறல் பயணிகள் மாத்திரம் இலங்கை திரும்பும்போது கட்டாய சுயத்தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட தேவையில்லை.

இதேவேளை வெளிநாடுகளிலிருந்து வருகைத்தருவோர் கட்டாயமாக 14 நாட்கள் சுயத்தனிமைப்படுத்தலை கடைப்பிடிக்க வேண்டுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...