அதிபர் – ஆசிரியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்!

Date:

அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் சில இன்று (22) கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட உள்ளனர்.

 

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆரம்பிக்கும் போராட்டம், ஜனாதிபதி செயலகம் வரையில் பயணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்குமாறு கோரி கடந்த 11 நாட்களாக ஆசிரியர்கள் இணைய வழி மூலமான கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகி செயற்பட்டு வருகின்றனர்.

 

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

புத்தாண்டு என்பது பண்டிகை மட்டுமல்ல, எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து...

கூட்டுச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் சமூக-கலாசார பிணைப்புடன் இந்த புத்தாண்டு அமைய நல்வாழ்த்துகள்: ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும்...

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...