அதிபர் – ஆசிரியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்!

Date:

அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் சில இன்று (22) கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட உள்ளனர்.

 

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆரம்பிக்கும் போராட்டம், ஜனாதிபதி செயலகம் வரையில் பயணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்குமாறு கோரி கடந்த 11 நாட்களாக ஆசிரியர்கள் இணைய வழி மூலமான கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகி செயற்பட்டு வருகின்றனர்.

 

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

O/L பரீட்சாத்திகளுக்கென இன்றும் இயங்கும் ஆட்பதிவு திணைக்களம்

17ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள  மாணவர்களில்  இதுவரை...

‘புதிய கல்வி சீர்திருத்தங்கள் தேவையானதே’ என்பதனை அழகிய முறையில் தெளிவுபடுத்திய புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் ஒன்றுகூடல்!

தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தேசிய அளவில்...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

நாட்டில் இன்று மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும்...

மாணவர்களுக்கான காலணி வவுச்சர்கள் : செல்லுபடி காலம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி...