இந்தோனேசியாவில் ஒரேநாளில் கொரோனா வைரசினால் ஆயிரம் பேர் மரணம்!

Date:

இந்தோனேசியாவில் முதல்தடவையாக கொரோனாவைரசினால் ஒரே நாளில் நேற்று ( புதன்கிழமை) ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளமை பதிவாகியுள்ளது.

இந்தோனேசியாவின் ஜாவாவில் மருத்துவமனைகள் சிகிச்சை வழங்க கூடிய எல்லையை கடந்துவிட்டதோடு ,ஆறுநகரங்களில் ஒக்சிசனிற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.இதேவேளை இந்தோனேசியாவின் பல பகுதிகளில் புதிதாக வைரஸ் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது என்ற அச்சமும் உருவாகியுள்ளது.

சிவப்பு வலயங்கள் என குறிக்கப்படும் பகுதிகளில் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வரும் அதிகாரிகள் பொதுமக்கள் நடமாட்டத்தின் மீதான கட்டுபாடுகளை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட டெல்டா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஜாவா பாலி தீவுகளில் பெருமளவிற்கு அதிகரித்துள்ளதை தொடர்ந்து அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

பப்புவா சுமத்திராவில் பாரிய நோய் பரவல் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதிக்குமாறு பிராந்தியங்களின் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை 34379 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 1040 மரணங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...