கம்மன்பிலவிற்கு எதிரான பிரேரணைக்கு எதிராக வாக்களித்த மக்கள் காங்கிரஸ் எம்.பிக்கள்!

Date:

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

குற்றப்புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அக்கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன், திடீரென சுகயீனமுற்றதால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனால் அவர், இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம் மற்றும் எம்.எம்.முஷாரப் ஆகியோர் நம்பிக்கையில்லா பிரேரணையினை எதிர்த்து வாக்களித்தனர்.

இவர்கள் மூவரும் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்ததனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே இன்று கொண்டுவரப்பட்ட அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...