சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுமா?

Date:

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்த போதிலும் நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

சமையல் எரிவாயுவின் விலை தொடர்பில் வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

 

பொருளாதார நெருக்கடி காரணமாக உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது, எனினும் இலங்கை அரசு அந்த சுமையை நுகர்வோர் மீது திணிக்காது என வர்த்தக அமைச்சர் தெரிவித்தார்.

 

அத்துடன் நிதி அமைச்சுடன் இணைந்து சமையல் எரிவாயுவின் விலையை முறையாக கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...