சிறுவர்களிற்கு எதிரான வன்முறைகளை எதிர்ப்பது பொறுப்புணர்வுள்ள சமூகத்தின் கடமை | சுதர்சினிபெர்ணான்டோபுள்ளே

Date:

நாட்டில் சிறுவர் துஸ்பிரயோகம் சிறுவர் அடிமைத்தனம் என எப்படி அழைத்தாலும் அனைத்தும் சிறுவர்களிற்கு எதிரான வன்முறைகளே அவற்றை எதிர்ப்பது பொறுப்புணர்வுள்ள சமூகத்தின் பொறுப்பு என இராஜாங்க அமைச்சர் சுதர்சினிபெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோகத்தினை வெறுமனே எதிர்ப்பதற்கு அப்பால் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட திட்டமொன்று அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்கள் என்பதால் குற்றமிழைத்தவர்களின் அந்தஸ்த்து பதவிகளை பாராமல் சட்டத்தினை பொறுப்புணர்வுடனும் துரிதமாகவும் நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோகம் குறித்த செய்திகளை அடிக்கடி கடந்தகாலங்களில் வாசித்திருக்கின்றோம் செவிமடுத்திருக்கின்றோம்,ஆனால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை தவிர சிறுவர்கள் மீண்டும் அந்த துயரத்திற்குள் சிக்குவததை தடுப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கான திட்டமிட்ட கலந்துரையாடல்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோகம் சிறுவர் அடிமைத்தனம் போன்றவை சிறுவர்கள் நீண்டகால உளவியல் பாதிப்பு மற்றும் உடல்ரீதியான பாதிப்புகளை எதிர்கொள்ளும் நிலையை உருவாக்குகின்றன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக சமூகம் செயல்இழக்கும் நிலை உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...