நேற்றைய தினம் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பில் அடையாளம்!

Date:

நேற்றைய தினம் (25) இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகி உள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

இதற்கமைய ​கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 360 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி இருந்தனர்.

 

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 256 பேரும் மற்றும் களுத்துறையில் 139 பேரும் தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.

 

மேலும் காலியில் 172 பேருக்கும், அம்பாறையில் 179 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அதனடிப்படையில் நேற்றைய தினம் நாட்டில் மொத்தமாக 1,666 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

அத்துடன் நேற்றைய தினம் தொற்றுக்கு உள்ளானவர்களுள் 10 பேர் வௌிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...