புதிதாக நிறுவப்பட்ட பொருளாதார கொள்கைகள் தொடர்பான திருத்தங்களுடன் விசேட வர்த்தமானி

Date:

புதிதாக நிறுவப்பட்ட பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் தொடர்பான திருத்தங்களுடன் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட திருத்தங்களாவன இரு அமைச்சுகளின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்புகள் தொடர்பானவை என வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு வழங்கிய மத்திய கலாச்சார நிதி உட்பட பல நிறுவனங்கள் இப்போது புதிய வர்த்தகானி அறிவித்தலின்படி கீழ் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு மாற்றப்பட்டுள்ளன. புதிய பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச நேற்று நிதியமைச்சராக பதவியேற்றார், பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடமிருந்து குறித்த அமைச்சகத்தை ஏற்றுக்கொண்டார்.

இதற்கிடையில், பிரதமர் ராஜபக்சவுக்கு புதிதாக நிறுவப்பட்ட பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஒதுக்கப்பட்டது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...