போராட்டங்கள் ஒரு உயிர்புள்ள ஜனநாயக சமூகத்தில் அவசியம் இருக்கும்-நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்!

Date:

எதிர்ப்பை வெளிப்படுத்தல் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய மனித உரிமையாகும். குடிமக்களின் பேச்சுச் சுதந்திரத்தை அனுபவிக்கும் ஒரு வழியாக போராட்டங்களை சுட்டிக்காட்டலாம்.

போராட்டங்கள் ஒரு உயிர்புள்ள ஜனநாயக சமூகத்தில் அவசியம் இருக்கும்,இருக்க வேண்டிய ஓர் விடயமாகும்.

வரலாறு முழுவதும் நேர்மறையான சமூக மாற்றத்திற்காக பேராட்டங்கள் அளித்த ஊக்கத்தின் ஏராளமான எடுத்துக்காட்டுகளை நாம் மேற்கோள் காட்டலாம்.

சர்வதிகார ஆட்சிகள் மற்றும் முடியாட்சிகள் என்பவற்றின் தோல்விகளின் வரலாற்றைப் பார்க்கும்போது இதை நாம் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

எதிர்ப்பை வெளிப்படுத்தல் எனும் விடயம் ஒரு ஜனநாயக சமூகத்தின் முன்னேற்றத்திற்கு குடிமக்கள் நேரடியாக பங்களிப்பதற்கான ஒரு வாய்ப்பாகும்.ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் நேரடி பிரதிநிதித்துவத்தில் ஈடுபட முடியாத ஒரு குடிமக்கள் குழுவிற்கு ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயக அமைப்பில் இதற்கான இடம் மிகவும் முக்கியமானதாக அமைகிறது.

ஒருநாட்டின் நடப்பு ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை,அந்த ஆட்சிக்கு ஒரு சவாலாகவோ அல்லது சங்கடமாகவோ பார்த்தாலும், குடிமக்கள் தங்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு மதிப்புமிக்க கருவியாகும்.

கோவிட் 19 தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியதும், குடிமக்கள் ஒன்றுகூடுவதற்கான உரிமையை இயற்கையே தடை செய்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...