மேல் மாகாணத்தில் புகையிரத சேவைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Date:

மேல் மாகாணத்தில் இன்று முதல் புகையிரத சேவைகளின் எண்ணிக்கை 103 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதையடுத்து புகையிரத பயணிகளின் எண்ணிக்கை நாளந்தம் அதிகரித்ததினால், புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

இதற்கமைவாக இன்று அதிகாலை 50 புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளன. பிற்பகலில் மேலும் 53 புகையிரத சேவைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

புதிய புகையிரத சேவைகால அட்டவனையின்படி பிரதான புகையிரத அம்பேபுஸ்ஸ மீரிகம வெயாங்கொட, கம்பஹா, மற்றும் ராகம ஆகிய பாதைகளின் ஊடாக 33 ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன.

கரையோர புகையிரத சேவைகளான அளுத்கம, களுத்துறை, மொரட்டுவ, பாணந்துறை மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய பிரதேசங்கள் ஊடாக 42 சேவைகளும் களனிவெளி புகையிரத பாதை ஊடாக அவிசாவளை, கொஸ்கம மற்றும் பாதுக்க ஆகிய பிரதேசங்களை ஊடறுத்து 13 புகையிர சேவைகளும் இடம்பெறவுள்ளன.

அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் வருவோரின் வசதிகருதி மாகாணங்களுக்கூடாக வரையறுக்கப்பட்ட பஸ்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...