அதிபர் – ஆசிரியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்!

Date:

அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் சில இன்று (22) கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட உள்ளனர்.

 

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆரம்பிக்கும் போராட்டம், ஜனாதிபதி செயலகம் வரையில் பயணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்குமாறு கோரி கடந்த 11 நாட்களாக ஆசிரியர்கள் இணைய வழி மூலமான கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகி செயற்பட்டு வருகின்றனர்.

 

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...