அதிபர் – ஆசிரியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்!

Date:

அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் சில இன்று (22) கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட உள்ளனர்.

 

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆரம்பிக்கும் போராட்டம், ஜனாதிபதி செயலகம் வரையில் பயணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்குமாறு கோரி கடந்த 11 நாட்களாக ஆசிரியர்கள் இணைய வழி மூலமான கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகி செயற்பட்டு வருகின்றனர்.

 

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...