இந்தோனேசியாவில் ஒரேநாளில் கொரோனா வைரசினால் ஆயிரம் பேர் மரணம்!

Date:

இந்தோனேசியாவில் முதல்தடவையாக கொரோனாவைரசினால் ஒரே நாளில் நேற்று ( புதன்கிழமை) ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளமை பதிவாகியுள்ளது.

இந்தோனேசியாவின் ஜாவாவில் மருத்துவமனைகள் சிகிச்சை வழங்க கூடிய எல்லையை கடந்துவிட்டதோடு ,ஆறுநகரங்களில் ஒக்சிசனிற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.இதேவேளை இந்தோனேசியாவின் பல பகுதிகளில் புதிதாக வைரஸ் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது என்ற அச்சமும் உருவாகியுள்ளது.

சிவப்பு வலயங்கள் என குறிக்கப்படும் பகுதிகளில் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வரும் அதிகாரிகள் பொதுமக்கள் நடமாட்டத்தின் மீதான கட்டுபாடுகளை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட டெல்டா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஜாவா பாலி தீவுகளில் பெருமளவிற்கு அதிகரித்துள்ளதை தொடர்ந்து அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

பப்புவா சுமத்திராவில் பாரிய நோய் பரவல் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதிக்குமாறு பிராந்தியங்களின் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை 34379 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 1040 மரணங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...