கென்யாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற ஊர்தி விபத்து | 13 பேர் உடல் கருகி பலி

Date:

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற ஊர்தி மற்றொரு ஊர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

தலைநகர் நைரோபியின் வடமேற்குப் பகுதியில் உகாண்டா நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள கிஸூமு என்ற இடத்தில் நெடுஞ்சாலையில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தாங்கி ஊர்தி ஒன்று மற்றொரு வாகனத்துடன் மோதி கவிழ்ந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் எரிபொருளை பிடிப்பதற்காக கேன்களுடன் சென்றனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக திடீரென அந்த ஊர்தியில் தீப்பற்றியது. இந்த விபத்தில் 13 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 24 பேர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...