சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுமா?

Date:

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்த போதிலும் நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

சமையல் எரிவாயுவின் விலை தொடர்பில் வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

 

பொருளாதார நெருக்கடி காரணமாக உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது, எனினும் இலங்கை அரசு அந்த சுமையை நுகர்வோர் மீது திணிக்காது என வர்த்தக அமைச்சர் தெரிவித்தார்.

 

அத்துடன் நிதி அமைச்சுடன் இணைந்து சமையல் எரிவாயுவின் விலையை முறையாக கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...