சிறுவர்களிற்கு எதிரான வன்முறைகளை எதிர்ப்பது பொறுப்புணர்வுள்ள சமூகத்தின் கடமை | சுதர்சினிபெர்ணான்டோபுள்ளே

Date:

நாட்டில் சிறுவர் துஸ்பிரயோகம் சிறுவர் அடிமைத்தனம் என எப்படி அழைத்தாலும் அனைத்தும் சிறுவர்களிற்கு எதிரான வன்முறைகளே அவற்றை எதிர்ப்பது பொறுப்புணர்வுள்ள சமூகத்தின் பொறுப்பு என இராஜாங்க அமைச்சர் சுதர்சினிபெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோகத்தினை வெறுமனே எதிர்ப்பதற்கு அப்பால் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட திட்டமொன்று அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்கள் என்பதால் குற்றமிழைத்தவர்களின் அந்தஸ்த்து பதவிகளை பாராமல் சட்டத்தினை பொறுப்புணர்வுடனும் துரிதமாகவும் நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோகம் குறித்த செய்திகளை அடிக்கடி கடந்தகாலங்களில் வாசித்திருக்கின்றோம் செவிமடுத்திருக்கின்றோம்,ஆனால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை தவிர சிறுவர்கள் மீண்டும் அந்த துயரத்திற்குள் சிக்குவததை தடுப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கான திட்டமிட்ட கலந்துரையாடல்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோகம் சிறுவர் அடிமைத்தனம் போன்றவை சிறுவர்கள் நீண்டகால உளவியல் பாதிப்பு மற்றும் உடல்ரீதியான பாதிப்புகளை எதிர்கொள்ளும் நிலையை உருவாக்குகின்றன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக சமூகம் செயல்இழக்கும் நிலை உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...