சிறுவர்களிற்கு எதிரான வன்முறைகளை எதிர்ப்பது பொறுப்புணர்வுள்ள சமூகத்தின் கடமை | சுதர்சினிபெர்ணான்டோபுள்ளே

Date:

நாட்டில் சிறுவர் துஸ்பிரயோகம் சிறுவர் அடிமைத்தனம் என எப்படி அழைத்தாலும் அனைத்தும் சிறுவர்களிற்கு எதிரான வன்முறைகளே அவற்றை எதிர்ப்பது பொறுப்புணர்வுள்ள சமூகத்தின் பொறுப்பு என இராஜாங்க அமைச்சர் சுதர்சினிபெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோகத்தினை வெறுமனே எதிர்ப்பதற்கு அப்பால் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட திட்டமொன்று அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்கள் என்பதால் குற்றமிழைத்தவர்களின் அந்தஸ்த்து பதவிகளை பாராமல் சட்டத்தினை பொறுப்புணர்வுடனும் துரிதமாகவும் நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோகம் குறித்த செய்திகளை அடிக்கடி கடந்தகாலங்களில் வாசித்திருக்கின்றோம் செவிமடுத்திருக்கின்றோம்,ஆனால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை தவிர சிறுவர்கள் மீண்டும் அந்த துயரத்திற்குள் சிக்குவததை தடுப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கான திட்டமிட்ட கலந்துரையாடல்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோகம் சிறுவர் அடிமைத்தனம் போன்றவை சிறுவர்கள் நீண்டகால உளவியல் பாதிப்பு மற்றும் உடல்ரீதியான பாதிப்புகளை எதிர்கொள்ளும் நிலையை உருவாக்குகின்றன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக சமூகம் செயல்இழக்கும் நிலை உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...