சுற்றுலாப் பயணிகளை கவர புதிய திட்டம்!

Date:

கலாசாரத்தை பாதுகாத்து சுற்றுலாப் பயணிகளை கவரக் கூடிய வகையில் கண்டி, போகம்பறை சிறைச்சாலை வளாகம் புனரமைக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

 

கண்டி, போகம்பறை சிறைச்சாலை புனரமைப்பு தொடர்பாக மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

 

மிக பழமை வாய்ந்த போகம்பறை சிறைச்சாலையின் புனரமைப்பு பணிகள் குறுகிய காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

 

சுற்றுலாப் பயணிகள் நீண்ட காலம் கண்டியில் தங்கி இருக்கக் கூடிய வகையில் சுற்றுலா அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடல் இடம் பெற்றதாக குறிப்பிட்ட அமைச்சர் கண்டிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஓரிரு தினங்கள் மட்டுமே கண்டி விடுதிகளில் தங்கி வெளியேறுகின்றனர்.

 

இந்த நிலையை மாற்றி கண்டி கிராமங்களில் உள்ள சுற்றுலா இடங்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இடையில் நீண்ட கால தொடர்புகள் இருக்கக்கூடிய பரிவர்த்தனை இடமாக போகம்பறை சிறைச்சாலை புனரமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...