டெல்டா கொவிட் வைரஸ் பரவல் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் பாதிப்பு!

Date:

மிக வேகமாக பரவும் டெல்டா கொவிட் வைரஸ் திரிபு இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி பெற்றவர்கள் மற்றும் பகுதியளவில் தடுப்பூசி பெற்றவர்களுக்கு பாதிப்பாக அமையலாமென, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்ப்பீடனம் மற்றும் கல உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் தனது ட்விற்றர் கணக்கில் பதிவிட்ட அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

அதில் மேலும் தெரிவித்துள்ள அவர், ஒரு குறிப்பிடத்தக்க சதவீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி போடும் வரை இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது முக்கியமாகுமென தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், கொவிட்-19 பரவல் தொடர்பான ஆபத்து இன்னும் தணியவில்லை என்பதையும் அவர் தனது ட்விற்றர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...