தேர்தல் முறைமையில் மறுசீரமைப்பு தொடர்பில் இதுவரை 07 அரசியல் கட்சிகளின் மூலம் 115 முன்மொழிவுகள்

Date:

நாட்டின் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழுவுக்கு 115 முன்மொழிவுகள் மற்றும் யோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அக்குழுவின் தலைவர் சபை முதல்வரும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று (07) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அந்தக் குழுக் கூட்டத்தின் போது தெரிவித்தார். ஏற்றுக்கொள்ளப்பட்ட 07 அரசியல் கட்சிகளின் மூலம் யோசனைகள் முவைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அந்தக் கட்சிகளுக்கு யோசனைகளை சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் யோசனைகளை sec.pscelectionreforms2021@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது செயலாளர், பாராளுமன்ற விசேட குழு, இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே எனும் முகவரிக்கோ அனுப்பிவைக்க முடியும். தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை மேகொள்வது தொடர்பில் 2021 ஜூன் 30ஆம் திகதி வரை கிடைக்கப்பெற்ற பொதுமக்களின் யோசனைகளை சபைக்கு சமர்ப்பித்தல் மற்றும் அந்த யோசனைகள் பற்றிய சாராம்சம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டது.

அதனையடுத்து உத்தேச மறுசீரமைப்புகள் தொடர்பில் நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. இந்தக் குழுக் கூட்டத்தில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திசாநாயக்க, கபீர் ஹஷீம், ரஞ்சித் மத்தும பண்டார, எம். ஏ. சுமந்திரன், மதுர விதானகே மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...