நாட்டில் இதுவரை 1 கோடியே 21 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது

Date:

இதுவரையில் இலங்கைக்கு 1 கோடியே 21 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கொவிட் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அவற்றுள் நூற்றுக்கு 72 சதவீதமானவை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டவை என தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் 80 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளும், 5 இலட்சம் எக்ஸ்டரா செனகா தடுப்பூசிகளும், 180,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகளும் மற்றும் 115,830 பைஸர் தடுப்பூசிகளையும் அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்காக இலங்கை ரூபாவில் 1,546 கோடி செலவழித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் சீனாவிடம் இருந்து 16 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் அன்பளிப்பாக கிடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...