நாட்டில் நேற்று 1,548 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அவர்களில் 1,515 பேர் புத்தாண்டு கொத்தணியை சேர்ந்தவர்கள் என்றும், எஞ்சிய 33 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவரகள் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 273,031 ஆக அதிரிகத்துள்ளது.
அத்துடன் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கையும் 26,758 ஆக அதிகரித்துள்ளது.இதேநேரம் 1,804 பேர் நேற்று கொவட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 242,839 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.