மன்னார் கத்தோலிக்க சிற்றாலய செரூபங்கள் தாக்குதலை வன்மையாக கண்டித்தார் | P.M. முஜீபுர் றஹ்மான்

Date:

மன்னார் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள மூன்று இடங்களில் அமைந்துள்ள கத்தோலிக்க சிற்றாலய செரூபங்கள் மீது இனம் தெரியாத நபர்களின் தாக்குதல்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முசலிப் பிரதேச உறுப்பினர் P.M. முஜீபுர் றஹ்மான் வன்மையாக கண்டித்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாறே இவ்வார ஆரம்ப நாட்களில் மேலும் மூன்று சிற்றாலயங்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன. இவைகளும் கண்டிக்கத்தக்கது என்றார்.

சுமார் 30 வருட யுத்தத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மன்னார் மாவட்டம் முதன்மையாக உள்ளது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இங்கு கத்தோலிக்க, ஹிந்து மற்றும் முஸ்லிம்கள் ஒற்றுமையாகவும் சகவாழ்வோடும் வாழ்கிறார்கள்.

சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் சகவாழ்வு என்பவற்றை விரும்பாத நாசகார சிந்தனை கொண்டவர்களே இவ்வாறான மனிதநேயமற்ற செயல்களைச் செய்துள்ளார்கள்.

இவ்வாறான செயல்களின் மூலம் சமூகளின் ஒற்றுமையை சிரழிக்க முயற்சிக்கும் நாசகார கும்பல்களை உடணடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸாரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...