முன்மொழியப்பட்டுள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகச் சட்டம் இலவச கல்விக்கு ஒரு மரண அடியாகும்-சஜித் பிரேமதாச!

Date:

நாட்டில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான உயர் கல்வியை வழங்குவதற்காக சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் வலுப்படுத்தப்படுவதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.

அதனை தேசிய தேவைப்பாடாகவும் கருதுகின்றோம்.எவ்வாறாயினும், பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான அடிப்படை கட்டமைப்பிலிருந்து விலகி, தற்போதுள்ள இலவசக் கல்வி அழிந்து போவதையும் உயர்கல்வியின் கட்டமைப்பிற்கு வெளியே நிறுவனங்கள் நிறுவுவதையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

 

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் இச் செயல்பாட்டில், உயர் கல்வியின் குணாம்சங்கள், தரம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆதிக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, இலவசக் கல்வி கடுமையான நெருக்கடியில் தள்ளப்படும்.

 

அதே நேரத்தில், அரசாங்கத்தின் இந்தச் செயலினால் பல்கலைக்கழக முறைமையின் அறிவுசார் சுதந்திரம் சுயாதீனத்தன்மை அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்பதுடன் இது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு வெளியே உயர் கல்வி நிறுவனங்களையும் உருவாக்கும்.

 

எனவே இலவசக் கல்வி மற்றும் அதன் மரபுரிமையாளர்களின் சுதந்திரத்திற்காக போராட்டங்கள் மூலம் முன்மொழியப்பட்ட சட்டத்தை தோற்கடிப்பதற்கு நாம் செயற்படுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...