மேல் மாகாணத்தில் புகையிரத சேவைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Date:

மேல் மாகாணத்தில் இன்று முதல் புகையிரத சேவைகளின் எண்ணிக்கை 103 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதையடுத்து புகையிரத பயணிகளின் எண்ணிக்கை நாளந்தம் அதிகரித்ததினால், புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

இதற்கமைவாக இன்று அதிகாலை 50 புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளன. பிற்பகலில் மேலும் 53 புகையிரத சேவைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

புதிய புகையிரத சேவைகால அட்டவனையின்படி பிரதான புகையிரத அம்பேபுஸ்ஸ மீரிகம வெயாங்கொட, கம்பஹா, மற்றும் ராகம ஆகிய பாதைகளின் ஊடாக 33 ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன.

கரையோர புகையிரத சேவைகளான அளுத்கம, களுத்துறை, மொரட்டுவ, பாணந்துறை மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய பிரதேசங்கள் ஊடாக 42 சேவைகளும் களனிவெளி புகையிரத பாதை ஊடாக அவிசாவளை, கொஸ்கம மற்றும் பாதுக்க ஆகிய பிரதேசங்களை ஊடறுத்து 13 புகையிர சேவைகளும் இடம்பெறவுள்ளன.

அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் வருவோரின் வசதிகருதி மாகாணங்களுக்கூடாக வரையறுக்கப்பட்ட பஸ்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...