மேல் மாகாணத்தில் புகையிரத சேவைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Date:

மேல் மாகாணத்தில் இன்று முதல் புகையிரத சேவைகளின் எண்ணிக்கை 103 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதையடுத்து புகையிரத பயணிகளின் எண்ணிக்கை நாளந்தம் அதிகரித்ததினால், புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

இதற்கமைவாக இன்று அதிகாலை 50 புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளன. பிற்பகலில் மேலும் 53 புகையிரத சேவைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

புதிய புகையிரத சேவைகால அட்டவனையின்படி பிரதான புகையிரத அம்பேபுஸ்ஸ மீரிகம வெயாங்கொட, கம்பஹா, மற்றும் ராகம ஆகிய பாதைகளின் ஊடாக 33 ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன.

கரையோர புகையிரத சேவைகளான அளுத்கம, களுத்துறை, மொரட்டுவ, பாணந்துறை மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய பிரதேசங்கள் ஊடாக 42 சேவைகளும் களனிவெளி புகையிரத பாதை ஊடாக அவிசாவளை, கொஸ்கம மற்றும் பாதுக்க ஆகிய பிரதேசங்களை ஊடறுத்து 13 புகையிர சேவைகளும் இடம்பெறவுள்ளன.

அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் வருவோரின் வசதிகருதி மாகாணங்களுக்கூடாக வரையறுக்கப்பட்ட பஸ்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...