வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த புதிய நிதியமைச்சர்

Date:

இலங்கையின் புதிய நிதியமைச்சர் பசில்ராஜபக்ச நேற்று அமெரிக்கா சீனா இந்தியா ஜேர்மனி ரஸ்யா ஆகியநாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களுடனும் மற்றும் ஐரோப்பியஒன்றியத்தின் பிரதிநிதியுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.
நிதியமைச்சில் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.இலங்கை பசுமை பொருளாதாரத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு;ள்ளது என இந்த சந்திப்பில் தெரிவித்துள்ள நிதியமைச்சர் புதுப்பிக்கத்தக்க சக்தி ஊக்குவிப்பு திட்டங்களிற்கான ஆதரவை கோரியுள்ளார்.
சூழலிற்கு பாதிப்பு இல்லாத வகையில் போக்குவரத்து துறைக்கு அவசியமான உட்கட்டமைப்பை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...