இலங்கையின் புதிய நிதியமைச்சர் பசில்ராஜபக்ச நேற்று அமெரிக்கா சீனா இந்தியா ஜேர்மனி ரஸ்யா ஆகியநாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களுடனும் மற்றும் ஐரோப்பியஒன்றியத்தின் பிரதிநிதியுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.
நிதியமைச்சில் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.இலங்கை பசுமை பொருளாதாரத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு;ள்ளது என இந்த சந்திப்பில் தெரிவித்துள்ள நிதியமைச்சர் புதுப்பிக்கத்தக்க சக்தி ஊக்குவிப்பு திட்டங்களிற்கான ஆதரவை கோரியுள்ளார்.
சூழலிற்கு பாதிப்பு இல்லாத வகையில் போக்குவரத்து துறைக்கு அவசியமான உட்கட்டமைப்பை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.