ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் நிலவும் முரண்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியை சந்திக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தகவல் வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன.
இதன்படி ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகளுக்கிடையேயான சந்திப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் செயற்பாடுகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.இவ்வாறான பின்னணியிலே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.