13 பாராளுமன்ற குழுக்கள் எதிர்வரும்  வாரங்களில் கூடவுள்ளதாக அறிவிப்பு!

Date:

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), அமைச்சு சார் ஆலோசனைக் குழுக்கள் உள்ளிட்ட 13 பாராளுமன்ற குழுக்கள் எதிர்வரும் 03 வாரங்களில் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

 

அதற்கமைய, எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதுடன், கோப் குழு அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் கூடவுள்ளது. அன்றைய தினம் நெடுஞ்சாலை அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தலைமையில் கூடவுள்ளது.

 

எதிர்வரும் 20 ஆம் திகதி வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் கூடவுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

 

அதற்கு மேலதிகமாக, ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையிலும், நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் அலி சப்ரி தலைமையிலும் சுகாதார அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தலைமையிலும் கூடவுள்ளது.

 

அதேவேளை, ஆகஸ்ட் 04 ஆம் திகதி வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலையில் பாராளுமன்றத்தில் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

 

ஆகஸ்ட் 05 ஆம் திகதி சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு கூடவுள்ளதுடன், நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுவும் கூடவுள்ளது. மேலும், அன்றைய தினம் கடற்றொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு அத தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கூடவுள்ளது.

 

அதேவேளை, எதிர்வரும் 17 ஆம் திகதி நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு கூடவுள்ளதுடன் அன்றைய தினம் அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்க தலைமையில் வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுவும் கூடவுள்ளது.

 

ஆகஸ்ட் 18 ஆம் திகதி மீண்டும் நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு கூடவுள்ளதாகவும், 19 ஆம் திகதி உயர் பதவிகள் பற்றிய குழு கூடவுள்ளதாகவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...